close
Choose your channels

மும்பை வருமான வரி அலுவலகத்தில் தீவிபத்து: நீரவ் மோடி, விஜய் மல்லையா குறித்த முக்கிய ஃபைல்கள் சாம்பலா?

Monday, June 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மும்பை நகரில் உள்ள பல்லார்டு பியர் என்ற பகுதியில் உள்ள சிந்தியா ஹவுஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வருமான வரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளியன்று மாலை 4 மணியளவில் இந்த கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

முதலில் கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளி வந்தததாகவும், அடுத்த சில நிமிடங்களில் தீ மளமளவென 3-வது மாடியில் இருந்த மற்ற அறைகளுக்கும் பரவியதுடன், பின்னர் காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ 4-வது மாடியிலும் பற்றியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த அலுவலகத்தில் தான் வங்கி மோசடி செய்த தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர்கள் வழக்குகள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது அந்த ஆவணங்கள் சாம்பலாகியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இது தற்செயலாக நடந்த தீ விபத்தா? அல்லது சதியா? என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.