ஆரி, சனம் குறித்து முதல்முறையாக மனம்திறந்த அனிதாவின் கருத்துக்கள்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் கிட்டத்தட்ட அனைவருமே ஆரியுடன் சண்டை போட்டதால் தான் வெளியேற்றப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. அதேபோல் ஆரியுடன் அதிகபட்ச ஆத்திரத்துடன் பேசிய அனிதாவும் அதனால்தான் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது

இந்த நிலையில் ஆரி மற்றும் சனம்ஷெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் தனது இருந்த நட்பு மற்றும் உறவு குறித்து அனிதா முதல்முறையாக மனம் திறந்து சில கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளர.

நான், ஆரி, சனம் ஆகிய மூவரும் உண்மையான நண்பர்களாக பிக்பாஸ் வீட்டில் இருந்தோம். பிக்பாஸ் வீட்டில் நாங்கள் ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்ட மகிழ்ச்சியான தருணங்களை மறக்கவே முடியாது. கோபமோ சண்டையோ மூஞ்சிக்கு நேராகவே சொல்லிவிடுவோம். அதுதான் எங்களின் பலம்

பிக்பாஸ் என்பது ஒரு விளையாட்டு. இதில் மன அழுத்தம் காரணமாக ஒரு சில தவறுகள் செய்வது வழக்கம் தான். இருந்தாலும் நாங்கள் ஏமோஷனல் உடன் விளையாடி ஒரு சில நேரங்களில் எங்களுடைய மனநிலையையும் இழந்துள்ளோம். நானும் அந்த வீட்டில் ஒரு சில தவறுகள் செய்திருக்கிறேன் என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் நான் சண்டை போட்டது மட்டுமே அதிகமாக மக்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. நானும் ஆரியிடம் சமாதானம் செய்தது, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி கொண்டது, வருத்தங்களை பரிமாறிக் கொண்டது, விளையாட்டாக செய்த பல விஷயங்கள் மக்களுக்கு காண்பிக்கப்படவில்லை ஆனால் அதே நேரத்தில் எங்கள் மூவருக்கும் உள்ள உறவு மற்றும் நட்பு எங்கள் மூவருக்கும் மட்டுமே தெரிந்த ஒரு உண்மையாகும். பிக்பாஸ் வீட்டில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய நட்பு வட்டாரம் ஆரி மற்றும் சனம் என்று அனிதா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்
 

More News

ரம்யாவை முதலிடத்திற்கு கொண்டு வந்த ’மாஸ்டர்’ விஜய்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இன்று இரண்டு சுற்றுகள் நடைபெற்றன. ஏற்கனவே நேற்று நடைபெற்ற

ஆன்மீகத்தில் ஐக்கியமாகிவிட்ட முன்னணி நடிகை… வைரல் புகைப்படம்!!!

தமிழின் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை அமலாபால் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2020 இல் நான் கற்றுக் கொண்டவை என்ற தலைப்பில் பல கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

போதைப்பொருள் வழக்கில் தெலுங்கு பட நடிகை ஒருவர் கைது!!!

தெலுங்கு சினிமாவில் 2 ஆவது ஹீரோயினாகப் பல படங்களில் நடித்து வரும் ஸ்வேதா குமாரி என்பவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளார்.

தளபதி விஜய் குறித்து ராஷ்மிகா மந்தனா கூறிய ஒரே ஒரு வார்த்தை!

தளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் கோடான கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும் அவரது படம் வெளியாகும்போதும் அவரது பிறந்த நாளின் போதும்

ஏ.ஆர்.ரஹ்மானை கொண்டாடும் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகம்: காரணம் இதுதான்!

கடந்த சில ஆண்டுகளாக திரையுலக பிரமுகர்களின் பிறந்த நாள் வரும்போது காமன் டிபி போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாவதும் அந்த போஸ்டர்களை பிரபலங்கள் வெளியிடுவதும் வாடிக்கையாக உள்ளது