close
Choose your channels

முதல்முறையாக கதை கேட்காமலேயே நடிக்க மறுத்தேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்

Wednesday, September 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, மற்றும் ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்களை இயக்கியவரும் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவருமான லட்சுமி ராமகிருஷ்ணன் முதல் முதலாக ஒரு தமிழ் படத்தில் கதை கேட்காமலேயே நடிக்க மறுத்ததாக தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முதல் முறையாக கதை கேட்காமலேயே ஒரு திரைப்படத்தில் நடிக்க மறுத்தேன். ஏனெனில் ஏற்கனவே ஒரு தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். அதுமட்டுமின்றி நான் இயக்க இருக்கும் அடுத்த படத்தின் பணியையும் விரைவில் ஆரம்பிக்க உள்ளேன். எனவே இந்த தமிழ் திரைப்படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் அந்த கேரக்டர் என்னை விட திறமையான ஒரு நடிகைக்கு செல்லும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அவர் இயக்கிய ’ஹவுஸ் ஓனர்’ திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் இந்த திரைப்படத்தில் கிஷோர் மற்றும் ஸ்ரீரஞ்சனி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.