முதல்முறையாக யோகிபாபுவின் வித்தியாசமான முயற்சி!

  • IndiaGlitz, [Wednesday,January 08 2020]

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு தற்போது கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நடிகர்களின் படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல் முறையாக நடிகர் யோகிபாபு தந்தை-மகன் என இரட்டை வேடத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. சித்தார்த் ஹீரோவாக நடித்து வரும் ’டக்கர்’என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தந்தை-மகன் ஆகிய இரண்டு வேடங்களில் யோகிபாபு நடித்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் சுதன் என்பவர் உறுதி செய்துள்ளார்.

முதல் முறையாக தந்தை-மகன் என்ற வித்தியாசமான கெட்டப்பில் யோகிபாபு நடித்துள்ளதாகவும் இந்த படம் அவருக்கு ’கோலமாவு கோகிலா’ படத்தை அடுத்து பேர் சொல்லும் வகையில் அமையும் ஒரு படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ’கப்பல்’ படத்தை இயக்கிய கார்த்திக் கிரிஷ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.