close
Choose your channels

சிறுத்தையை அடித்து கறி விருந்து சாப்பிட்ட 5 பேர் கைது!

Saturday, January 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரளாவில் சிறுத்தையைப் பொறி வைத்து பிடித்து குழம்பு வைத்து சாப்பிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இடுக்கி மாவட்டம் முனியார் வனப்பகுதியில் சிலர் சிறுத்தையைப் பிடித்து சாப்பிடுவதாக வனத்துறைக்கு வந்த தகவலின் பேரில் அதிகாரிகள் தேடுதல் வேட்டையை நடத்தி 5 பேரை கைது செய்து உள்ளனர்.

வனத்துறை அதிகாரிகள் நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு வீட்டில் 10 கிலோ சமைக்கப்பட்ட சிறுத்தையின் இறைச்சியோடு அவற்றின் தோல், பற்கள் ஆகியவை கைப்பற்றப் பட்டுள்ளன. இதனால் வினோத் (45), குரியகோஸ் (74), சி.எஸ்.பினு (50) சாலி குஞ்சப்பன் (54), வின்சென்ட் (50) ஆகியோரை கைது செய்து உள்ளனர். மேலும் இந்தியாவிலே முதன் முதலாக சிறுத்தையை சமைத்து சாப்பிட்ட வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட இந்த 5 பேருக்கும் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1972 இல் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தின்படி தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. இதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் மசினகுடி பகுதியில் 40 வயது யானை ஒன்றிற்கு பெட்ரோல் ஊற்றி கொளுத்திய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தீ வைக்கப்பட்ட அந்த யானை உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.