close
Choose your channels

ஊரடங்கு உத்தரவிற்கு பின்னரும் டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்: அதிர்ச்சி தகவல்

Wednesday, March 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகமெங்கும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி வரும் நிலையில் இந்தியாவிலும் சுமார் 500 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பரவி விட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளது மத்திய அரசு

இருப்பினும் அரசின் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்படாமல் ஒரு சிலர் வெளியே வந்து கொரோனா வைரசை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். இதனால் ஊரடங்கு உத்தரவு பயனில்லாமல் போய் வருகிறது. ஒருசிலர் ஊரடங்கு உத்தரவை மீறினாலும் இந்த உத்தரவு பலனளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாடு முழுவதற்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டிய தலைநகர் டெல்லியில் மக்கள் வீதியில் நடனமாடி வருவதாகவும் இதனால் அங்கு கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. சற்றுமுன் வெளிவந்த தகவலின் படி டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே டெல்லியில் கொரோனா வைரசால் இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள டெல்லி மக்கள், அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.