close
Choose your channels

கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்ட படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா: படப்பிடிப்பு ரத்து

Monday, April 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்ட படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட 5 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. முதல் முறையாக மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்வதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

’சர்காரு வாரி பாட்டா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கியது. படப்பிடிப்பு தொடங்கு முன் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் படப்பிடிப்பு தளத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அறிந்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகள் வீதி அடைந்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா என்ற தகவல் தெலுங்கு திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.