கரைபுரளும் வெள்ளத்தால் பாலம் அடித்துச் செல்லும் கோரம்… அதிர்ச்சி வீடியோ!

  • IndiaGlitz, [Wednesday,August 04 2021]

மத்தியப்பிரதேசம் மாநிலம் சிந்து ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அங்குள்ள இரண்டு பெரிய பாலங்கள் இடிந்து வெள்ளத்தோடு வெள்ளமாக அடித்துச் செல்லும் காட்சி பலரையும் அச்சமடைய செய்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் சிவபுரி, ஷியோப்பூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக 800 மி.மீட்டர் அளவிற்கு கனமழை பொழிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிந்து ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. எனவே சிவபுரி மாவட்டத்தில் உள்ள அடல் சாகர் எனும் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

இந்த நீரானது சிவபுரி, ஷியோப்பூர், ரத்தன்நகர், குவாலியர், சம்பல் எனும் பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து ஒடி அங்குள்ள பாலங்களையும் நீர்ப்பிடிப்பு நிலையங்களையும் சேதப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் ரத்தன்நகர் பகுதியில் உள்ள 2 பெரிய பாலங்கள் பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தில் மூழ்கிய காட்சி பலரையும் அச்சமடைய வைத்திருக்கிறது. இந்தக் காட்சி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More News

ஆபாசப்படம் பார்த்து சுயஇன்பம் பண்றீங்களா? அச்சுறுத்தும் சைபர் ஹேக்கிங்!

சமீபகாலமாக மற்றவர்களின் செல்போனையோ அல்லது லேப்டாப்பையோ  ஹேக்கிங் செய்து பணம் பறிக்கும் நடவடிக்கை அதிகரித்து விட்டது.

'அண்ணாத்த' ஃபர்ஸ்ட்லுக் தேதி: ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

நித்யா மேனனை அடுத்து தனுஷின் 'D44' படத்தில் இணைந்த இரண்டு நடிகைகள்!

தனுஷ் நடிக்க உள்ள 44வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

பா ரஞ்சித் படத்தில் 3வது முறையாக ஹீரோவாக நடிக்கும் நடிகர்

பா ரஞ்சித்தின் இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் ஒருவர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

முதல்ல இதை நிறுத்து: யாஷிகாவுக்கு வனிதா கூறிய அறிவுரை!

சமீபத்தில் நடந்த கார் விபத்தில் தனக்கு ஏற்பட்ட காயம் குறித்தும், தனது உயிர் தோழி பவானி பலியானது குறித்தும் மிகவும் உருக்கமாக அடுத்தடுத்து இன்ஸ்டாகிராமில் நடிகை யாஷிகா பதிவு செய்துள்ளது