close
Choose your channels

மனைவியை கொலை செய்து கொரோனா மீது பழிபோட்ட கணவன்

Sunday, April 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மனைவியை கொலை செய்துவிட்டு கொரோனா மீது பழி போட்ட கணவர் ஒருவரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா பகுதியை சேர்ந்த டேவிட் அந்தோணி கடந்த மார்ச் மாதம் தனது மனைவி கிரெட்சனுக்கு கொரோனா வைரஸ் தாக்கியதாகவும், அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் மனைவியின் உறவினர் உள்பட அனைவரையும் நம்ப வைத்தார்.

இருப்பினும் மனைவியின் உறவினர்களுக்கு சந்தேகம் வர, இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து டேவிட் கூறிய மருத்துவமனையில் சென்று விசாரித்தபோது டேவிட் மனைவி அங்கு அட்மிட் ஆகவில்லை என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து டேவிட் அந்தோணி வீட்டை போலீசார் தீவிரமாக சோதனை செய்ததில் ரத்தக்கறை படிந்த துணி ஒன்றை கண்டுபிடித்தனர். மேலும் படுக்கையறையில் சில உறைந்த ரத்தமும் இருந்தது. அதன்பின் டேவிட்டை போலீசார் தங்கள் பாணியில் விசாரணை செய்தபோது அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கொலையில் இருந்து தப்பிக்க கொரோனாவால் தனது மனைவி பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அனைவரையும் நம்ப வைத்ததையும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மனைவியை கொலை செய்துவிட்டு கொரோனா மீது பழிபோட்ட கணவரின் செயலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.