close
Choose your channels

உண்மை ஒருநாள் வெளியே வரும்! 25 வருடங்கள் கழித்து தாயின் கொலையை கண்டுபிடித்த மகன்

Wednesday, April 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புளோரிடாவை அடுத்த ஜாக்சன்வில்லி (Jacksonville) என்ற பகுதியில் 25 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது தாயின் உடலை அவரது மகன் கண்டுபிடித்துள்ளார். மேலும் தனது தாயாரை தந்தையே கொலை செய்த அதிர்ச்சி செய்தியும் அவருக்கு கிடைத்துள்ளது

ஜாக்சன்வில்லியை சேர்ந்த மைக்கேல் மற்றும் போனிஹெய்ம் தம்பதிக்கு ஆரோன் என்ற மகன் இருந்தார். இவர் தனது பழைய வீட்டை புதுப்பிக்க முடிவு செய்து வீட்டை பராமத்து பணிகள் செய்தார். அப்போது ஒரு இடத்தில் தோண்டுபோது ஒரு மனித மண்டை ஓடு கிடைத்தது. பின்னர் அந்த மண்டை ஓடு கடந்த 1993ஆம் ஆண்டு காணாமல் போன தனது தாயாரின் மண்டை ஓடு என்பதையும் அவர் உறுதி செய்தார்

இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது ஆரோன் தாயாரை அவரது தந்தையே கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் புதைத்துள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து மைக்கேல் கைது செய்யப்பட்டார்.

25 வருடங்களுக்கு முன் ஒரு பெண் கொலை செய்யப்பட்டது அவரது மகனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உண்மை ஒரு நாள் வெளியே வந்தே தீரும் என்பதற்கு உதாரணமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.