close
Choose your channels

அமெரிக்க பள்ளியில் பயங்கர துப்பாக்கி சூடு: 19 வயது முன்னாள் மாணவன் கைது

Thursday, February 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்க பள்ளியில் பயங்கர துப்பாக்கி சூடு: 19 வயது முன்னாள் மாணவன் கைது

அமெரிக்காவில் உள்ள புளோரிடோ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளதாகவும், 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் திடுக்கிடும் செய்தி வெளிவந்துள்ளது

அமெரிக்காவில் உள்ள மார்ஜொரி ஸ்டோன்மேன் டக்ள்ஸ் பள்ளியில் இன்று காலை திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி தாக்கியுள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்டு பள்ளியில் இருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் அலறியடித்து பள்ளியில் இருந்து வெளியே ஓடியுள்ளனர்.

இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் போலீஸார் மற்றும் மீட்புப்படையினர் பள்ளியினை சுற்றி வளைத்தனர். இதில் துப்பாக்கி சூடு நடத்திய 19 வயது இளைஞர் பிடிபட்டார். இவர் இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்றும், அவரது பெயர் நிக்கோலஸ் குரூஸ் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒழுங்கீனம் காரணமாக கடந்த ஆண்டு பள்ளியில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.