close
Choose your channels

உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களுக்காக உணவு, தங்குமிடம் ஏற்பாடு!

Monday, February 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 5 நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனில் படித்து வரும் ஏராளமான இந்திய மாணவர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர். சுமார் 13 ஆயிரம் மாணவர்கள் உக்ரைனில் இருந்து வரும் நிலையில் அவர்களை படிப்படியாக மத்திய அரசு சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வருகின்றது என்பதும் இன்று 6வது விமானம் இந்திய மாணவர்களுடன் டெல்லியில் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போலந்து வழியாக இந்தியாவுக்கு செல்லும் மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில் உணவு தங்குமிடம் சாப்பாடு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக வருகின்றன.

உக்ரைனிலிருந்து போலந்து வழியாக இந்தியா செல்லும் மாணவர்களுக்கு விமானங்கள் கிடைக்கும் வரை அந்த இடத்தில் அவர்கள் தங்கிக் கொள்ளலாம் என்றும், அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.