close
Choose your channels

இணையத்தில் வைரலான டீடாக்ஸ் கருப்பு இட்லி… செய்வது எப்படி?

Monday, December 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய உணவு முறைகளில் மிகவும் பாரம்பரியமாக இருந்துவரும் உணவுப்பொருட்களுள் ஒன்று இட்லி. அதுவும் வெள்ளை நிறத்தில் மென்மையாக ஆவி பறக்க இதைச் சாப்பிடுவதே ஒரு அலாதியான சுகம். இப்படியிருக்கும்போது கருப்பு நிறத்தில் செய்யப்பட்ட இட்லி வகை ஒன்று கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் கடும் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த கருப்பு நிற இட்லி டீடாக்ஸ் செய்யப்பட்ட உணவு என்றும் கூறப்படுகிறது. அதென்ன? டீடாக்ஸ் என்ற சந்தேகம் வரலாம். அதாவது உணவில் நச்சுத்தன்மையை நீக்கி ஆரோக்கியமான முறையில் செய்யப்படும் உணவுமுறைக்குப் பெயர் டீடாக்ஸ். அப்படி செய்யப்பட்ட ஒரு உணவாகத்தான் தற்போது நாக்பூர் பகுதிகளில் இந்த கருப்பு நிற இட்லி வியாபாராத்தில் சக்கைப்போடு போடுகிறது.

செய்முறை- எப்போதும்போல அரிசி, உளுந்து, வெந்தயம், சவ்வரிசி ஆகியவற்றை 8 மணி நேரம் ஊற வைத்துப் பின்னர் இட்லி பதத்திற்கு மாவு அரைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். பின்னர் சற்று புளிப்பு தன்மை வருவதற்காக சோடா உப்பு சிறிதளவு சேர்த்து இன்னும் ஒரு 8 மணிநேரம் அதைப் பக்குவப்படுத்த வேண்டும்.

அதேநேரத்தில் தேங்காய் ஓட்டில் உள்ள சில்லுகளை எடுத்து தீயிட்டு கொளுத்த வேண்டும். அந்த தேங்காய் சில்லுவில் இருந்து எடுக்கப்பட்ட கரியை சலித்து 2 ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொண்டால் போதுமானது. இந்த கரித்தூளுடன் இட்லி மாவு, சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் உப்பை சேர்த்து கலந்தால் டீடாக்ஸ் கருப்பு இட்லிக்கு தேவையான மாவு ரெடி. அந்த மாவை இட்லி குக்கர் அல்லது பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்க வேண்டும்.

இந்த கருப்பு நிற இட்லியின் மீது நெய் மற்றும் மிளகாய் பொடி மற்றும் சட்னி சேர்த்து கொடுத்தால் அழகான காலை நேர உணவும் தயாராகிவிடும். இப்படித்தான் நாக்பூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக டீடாக்ஸ் கருப்புநிற இட்லியின் வியாபாரம் சூடு பிடித்து இருக்கிறது. மேலும் இந்த இட்லி கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றதல்ல என்றும் அவர்களே குறிப்பிட்டு உள்ளனர்.

தேங்காய் சில்லு- தேங்காய் ஓடு (சில்லு) ஏற்கனவே இனிப்புப் பொருட்கள் கேக் போன்ற பேக்கரி பொருட்களில் கரித்தூள் வடிவத்தில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது அற்புதமான சுவை மற்றும் நறுமணத்தைக் கொண்டிருப்பதால் ஈஸ்டர் கேக்குகளில் பழங்காலம் தொட்டே பயன்பாட்டில் இருந்து வருகிறது.

மேலும் இந்தத் தேங்காய் சில்லுகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மையை போக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதோடு உணவின் பண்புகளை கெடுக்காமல் அற்புத சுவையை இதுகொடுக்கிறது.

தேங்காய் ஓட்டில் கொழுப்பு, கரிம அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், மோனோ பாலிசாக்கரைடுகள், லாரிக் அமிலம் போன்றவை இருப்பதால் உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கிறது. இதில் புரதம் 13 கிராம், கொழுப்பு 65 கிராம், கார்போஹைட்ரேட்டுகள் 14 கிராம் ஆகிய அளவுகளில் அடங்கியிருக்கின்றன.

மேலும் இது செரிமான அமைப்பை சுத்திகரிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. சிறுநீரக நோய்கள் உள்ளவர்களுக்கு இது அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. காது வலி, காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நேரங்களில் இந்த தேங்காய் சில்லு கரித்தூளை பயன்படுத்தலாம். கூடுதல் ஆக்ஸிஜனேற்றியாகவும் இது செயல்படுகிறது.

தேங்காய் சில்லுவை பயன்படுத்துவதால் புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம்.

இரத்த அணுக்களில் கொலஸ்ட்ரால் அளவை இது கணிசமாகக் குறைக்கிறது. இருதய நோய்களின் அபாயத்தை குறைக்க வழிவகுக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதில் வைப்டடமின் பி மற்றும் சி ஆகியவையும் அடங்கியிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.