close
Choose your channels

கொரோனாவுக்கு பயந்து, தற்கொலை செய்துகொண்ட கால்பந்து அணியின் மருத்துவர்!!!

Monday, April 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனாவுக்கு பயந்து, தற்கொலை செய்துகொண்ட கால்பந்து அணியின் மருத்துவர்!!!

 

பிரெஞ்சு, கால்பந்து Ligue 1 Club Reims அணியின் மருத்துவர் கோன்சலஸ் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்ட நிலையில் நேற்று தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவத்தால் ஒட்டுமொத்த அணியும் தற்போது வருத்தத்தில் ஆழ்ந்து இருக்கிறது.

கொரோனா அறிகுறி இருந்ததால் மருத்துவர் கோன்சல்ஸ் பரிசோதனை செய்துகொண்டிருக்கிறார். சோதனையில் மருத்துவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் நேற்று மருத்துவர் கடும் வருத்தத்தில் இருந்ததாக கால்பந்து அணியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று திடீரென மருத்துவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். அதற்குப்பின்பு, ஒரு கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் தனக்கு கொரோனா இருக்கிறது என மருத்துவர் குறிப்பிட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பிரெஞ்சு, கால்பந்து Ligue 1 Club Reims அணிக்கு கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அவர் மருத்துவராக பணியாற்றியுள்ளார். கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானதுடன் நேற்று அவர் சோகத்தில் ஆழ்ந்திருந்ததாகவும் கொரோனாவுக்கு பயந்தே மருத்துவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் தற்போது ஒட்டுமொத்த அணியினரும் வருத்தம் தெரிவித்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.