ஒவ்வொரு அடிக்கும் 100 ஜிகாதிகள் கொல்லப்பட வேண்டும். கவுதம் காம்பீர் ஆவேசம்

  • IndiaGlitz, [Saturday,April 15 2017]

சமீபத்தில் நடந்த ஸ்ரீநகர் தேர்தலின்போது வாக்கு இயந்திரத்தை கொண்டு சென்ற சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது சில ஜிகாதிகள் தாக்குதல் நடத்தி அவமதித்த வீடியோ ஒன்று நாடு முழுவதும் பரவி பெரும் கண்டன அலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறிய கருத்து குறித்து நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் இதே சம்பவம் குறித்து பிரபல கிரிக்கெட் வீரர்கள் சேவாக் மற்றும் கவுதம் காம்பீர் ஆகியோர் தங்கள் சமூகவலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கவுதம் காம்பீர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ''நம் வீரர்கள் மீது விழும் ஒவ்வொரு அடிக்கும் 100 ஜிகாதிகள் கொல்லப்பட வேண்டும். காஷ்மீரைப் பிரிக்க நினைப்பவர்கள் வெளியேறுங்கள். காஷ்மீர் எங்களுடையதே' என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

அதேபோல் சேவாக் தனது சமூகவலைத்தளத்தில் கூறியபோது, 'இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. நம் வீரர்களை இவ்வாறு செய்திருக்கக்கூடாது. இந்தக் கொடுமை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். என்று கூறியுள்ளார்.

More News

விஜய், சூர்யாவை அடுத்து அஜித்துடன் நடிப்பது எப்போது? கீர்த்தி சுரேஷ்

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய கீர்த்திசுரேஷ் குறுகிய காலத்தில் இளையதளபதி விஜய்யுடன் 'பைரவா' மற்றும் சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்...

சமண முனிவருக்கு ஈடானவர் பாரதிராஜா: கமல்ஹாசன்

பிரபல இயக்குனர் பாலுமகேந்திராவின் 'கூத்துப்பட்டறை'க்கு பின்னர் பாரதிராஜா தற்போது சினிமாவுக்கு என ஒரு தனி பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளார். 'பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சினிமா' என்ற இந்த சினிமா பயிற்சி மையத்தின் தொடக்கவிழா நேற்று சிறப்பாக நடந்தது...

வடபழனி கோவிலில் பிச்சை எடுத்த ஜமுனாவுக்கு விஷால் உதவி

சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சிவகுமார் ஆகியோர்களுடன் நடித்த குரூப் டான்சர் ஜமுனா என்பவர் சென்னை வடபழனி கோவிலில் பிச்சை எடுப்பதாகவும், அவர் தனக்கு, தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க செயலாளர் விஷால் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த செய்தியையும் சமீபத்தில் பார்த்தோம்...

தொலைக்காட்சிக்கு மாறுகிறாரா கமல்ஹாசன்?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'சபாஷ் நாயுடு' என்ற படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தார்...

சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் இளையராஜா-யுவன்ஷங்கர் ராஜா

இசைஞானி இளையராஜா ஏற்கனவே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடன் இணைந்து 'மெல்ல திறந்தது கதவு, 'செந்தமிழ்ப்பாட்டு' போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்...