close
Choose your channels

எம்ஜிஆர்-சிவாஜி முதல் அஜித்-விஜய் வரை நடித்த கேரக்டரில் முதல்முறையாக பிரபுதேவா

Sunday, May 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சினிமா ஹீரோக்களுக்கு காக்கி சட்டை அணிய வேண்டும் என்பது ஒரு கனவு என்றே சொல்லலாம். கம்பீரமான போலீஸ் கேரக்டரில் நடித்த பிரபலமான ஹீரோக்கள் படங்கள் பெரும்பாலனவை சூப்பர் ஹிட் தான். 'என் கடமை', 'தங்கப்பதக்கம்', 'காக்கி சட்டை', 'மூன்று முடிச்சு', 'என்னை அறிந்தால்', 'போக்கிரி' என எம்ஜிஆர், சிவாஜி முதல் அஜித், விஜய் வரை போலீஸ் யூனிபார்ம் போடாத ஹீரோவே இல்லை என்று கூறலாம்.

இந்த நிலையில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் , தயாரிப்பாளர் போன்ற அவதாரங்களில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை புகழ்பெற்ற பிரபுதேவா முதல்முறையாக ஒரு படத்திற்காக காக்கி சட்டை அணியவுள்ளார். 

கோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான நேமிசந்த் ஜெபக் தயாரிக்கும் படத்தில்தான் பிரபுதேவா முதன்முதலில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் முகில் இயக்கவுள்ளார். இவர் பிரபுதேவா இயக்கிய 'போக்கிரி' மற்றும் 'வில்லு' படங்களில் பிரபுதேவாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை நேமிசந்த் ஜெபக் அவர்கள் தனது சமூக  வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இவருடைய தயாரிப்பில் உருவான ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' வரும் ஜூன் 22ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.