தமிழ்நாட்டின்‌ தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள்‌ வந்தாச்சு: ரஜினி அரசியல் குறித்து அதிமுக பிரபலம்! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று அரசியல் கட்சி ஆரம்பிக்கவிருப்பதை உறுதி செய்த நிலையில் அதிமுக பிரபலமும், முன்னாள் சென்னை மேயருமான சைதை துரைசாமி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தமிழ்நாட்டின்‌ தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள்‌ வந்தாச்சு என்று குறிப்பிட்டுள்ளார். அவரது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

சூப்பர்‌ ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌ அவர்கள்‌ ஜனவரியில்‌ கட்‌சி துவக்கம்‌, வருகின்ற டிசம்பர்‌ 31-ம்‌ தேதி அறிவிப்பு என்று சொல்லி இருக்கிறார்‌. இது சாதாரண அறிவிப்பு அல்ல. தமிழக அரசியலில்‌ மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திருப்பம்‌ இது. 1972-ல்‌ புரட்சி தலைவர்‌ எம்ஜிஆர்‌ கொண்டுவந்த மாற்றத்தை போல அமையக்கூடிய திருப்பத்தை, சூப்பர்‌ ஸ்டார்‌ ரஜினி அறிவித்துள்ளார்‌.

 

கடந்த 2018ம்‌ வருடம்‌ மார்ச்‌ 5-ம்தேதி சென்னை வேலப்பன்‌ சாவடியில்‌ புரட்‌சித்தலைவர்‌ பொன்மனச்செம்மல்‌ இதய தெய்வம்‌ எம்ஜிஆர்‌ அவர்களின்‌ திருவுருவச்சிலை திறப்பு விழாவிலே அவர்‌ “ என்னால்‌ புரட்சி‌ தலைவர்‌ எம்ஜிஆர்‌ போல நல்லாட்சியை, ஏழைகளுக்கான ஆட்சியை, சாமானியருக்கான ஆட்சியை, நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கான ஆட்சியை தரமுடியும்‌” என்பதை ஆழ்ந்த நம்பிக்கையுடன்‌ உறுதிபடச்‌ சொல்லி இருந்தார்‌.

நல்ல திறமையான ஆலோசகர்களையும்‌ தொழில்நுட்பங்களையும்‌ பயன்படுத்தி அத்தகைய ஒரு ஆட்சியை கொடுப்பேன்‌ என்பதையும்‌ சொல்லி இருந்தார்‌. ஏழைகளுக்கான சாமானிய மக்களுக்கான புரட்‌சி த்தலைவரின்‌ ஆட்சியை மீண்டும்‌ தமிழகத்தில்‌ மலரச்செய்ய சூப்பர்‌ ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌ அவர்கள்‌ முன்வந்திருப்பதை நான்‌ வரவேற்கிறேன்‌.

அவருக்கு எம்ஜிஆருக்கு துணை நின்று, ஆதரவளித்து, திமுகவை வீழ்திய அனைவரும்‌ ஆதரவு தருவார்கள்‌ என்பது எண்ணம்‌ கொரோனா நோய்‌ தொற்றுக்‌ காலத்தில்‌ தன்‌ உயிரையும்‌ பொருட்படுத்தாமல்‌ தமிழக மக்களின்‌ நலனை மட்டுமே மனதில்‌ கொண்டு அவர்‌ முழுநேர அரசியலில்‌ ஈடுபடுவது என்று முடிவு எடுத்திருப்பது மிகவும்‌ வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது. தமிழ்நாட்டின்‌ தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள்‌ வந்தாச்சு. நிச்சயம்‌ அது நடக்கும்‌” என்ற ரஜினியின்‌ நம்பிக்கையான வார்த்தையை வரவேற்று அவருக்கு என்‌ மனமார்ந்த வாழ்த்துகள்‌.

இவ்வாறு முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 

More News

சற்றுமுன் மீண்டும் அரசியல் கட்சி குறித்த ரஜினியின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிட இருப்பதாகவும், கட்சியை ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாகவும் இன்று அறிவித்தார்

நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் பார்வதி நாயர்: டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்து வருவது போல் தற்போது நடிகை பார்வதி நாயரும் நாயகிக்கு

தமிழில் வெளியாகும் வார்னர் பிரதர்ஸின் 'வொண்டர் வுமன் 1984': தேதி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின் தற்போது இந்தியா முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படுவதை அடுத்து இந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி ஹாலிவுட் திரைப்படங்களும் ரிலீஸ் ஆக தயாராகி வருகின்றன

ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு: துணை முதலமைச்சர் ஓபிஎஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அரசியலுக்கு வரவிருப்பதை உறுதி செய்துள்ள நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 

அர்ஜுன மூர்த்தியுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம்: பாஜக

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார் என்பதும், தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூன மூர்த்தி ஆகிய இருவரையும்