சச்சினுக்கு ஒரு நியாயம், விஜய்க்கு ஒரு நியாயமா? முன்னாள் முதல்வரின் மகன் கேள்வி!

  • IndiaGlitz, [Wednesday,July 14 2021]

விஜய் வாங்கிய ரோல்ஸ்ராய் காருக்கு வரி விதிப்பது குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து பல திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் கருத்து கூறி வரும் நிலையில் முன்னாள் முதல்வரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ஜெயபிரதீப் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் சச்சினுக்கு ஒரு நியாயம் விஜய்க்கு ஒரு நியாயமா? என்றும் உழைப்பால் உயர்ந்தவர்கள் அனைவரும் பாராட்ட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கோரியதற்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

சினிமா துறையில் தனது சொந்த உழைப்பால் உயர்ந்து தான் வாங்கும் ஊதியத்திற்கு முறையாக வருமான வரியாக கோடிக்கணக்கான பணத்தை அரசுக்குச் செலுத்தி வருபவர் நடிகர் விஜய். அந்த பணம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிகரமாக இருந்துள்ளது. எப்போதும் ஒரு மனிதரின் நிறைகளை குறைவாக பேசுவதும், சிறு சிறு குறைகளை மிகைப்படுத்திப் பேசுவது மனித இயல்பாக இருக்கின்றது.

மேலும் இறக்குமதி செய்த வாகனங்களுக்கு வரி விலக்கு கேட்பது அவரவர் உரிமை சார்ந்தது. இந்த உரிமை நடிகர் விஜய் அவர்களுக்கு உண்டு. சினிமா பிரபலம் என்றால் அவருக்கு பொருந்தாது என்று ஆகாது. இதேபோல் 2012இல் வரி விலக்கு கேட்டு சச்சின் தெண்டுல்கர் உள்பட பலரும் கோரிக்கை வைத்தனர். இதில் சச்சினுக்கு சட்ட திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு ரூ 1.13 கோடி வரி விலக்கு அளித்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

எனவே சரிவர புரிந்து கொள்ளாமல் தவறான கருத்துக்களை சமூக வலை தளங்களில் பதிவு இடுவதை தவிர்க்க வேண்டும். எந்த மனிதனாக இருந்தாலும் பல கஷ்டங்களையும் விருப்பு வெறுப்புகளையும் அவமானங்களையும் தாண்டி தான் உயர் நிலைக்கு வரமுடியும். அப்பேர்ப்பட்டவர்களை பாராட்ட மனம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை, குறை கூறுவதைத் தவிர்க்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.

More News

விஷ்ணுவிஷாலின் 'எஃப்.ஐ.ஆர்' படத்தின் சூப்பர் அப்டேட்!

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால் என்பதும் அவர் தற்போது ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

'எனிமி'யை அடுத்து தெலுங்கிலும் வில்லனாக நடிக்கின்றாரா ஆர்யா?

விஷால் நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'எனிமி' திரைப்படத்தில் நடிகர் ஆர்யா வில்லனாக நடித்த நிலையில் தற்போது தெலுங்கிலும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. 

செல்வராகவனின் உதவி பெண் இயக்குனர் படத்தில் யோகிபாபு?

செல்வராகவனிடம் உதவியாளராக இருந்த பெண் இயக்குனர் அறிமுகமாகும் படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

'என் மாப்ளே விஜய்யாக வாழ்வது ரொம்ப கஷ்டம்': விஜய் நண்பரின் டுவிட்!

தளபதி விஜய்யுடன் பல திரைப்படங்களில் நடித்தவரும் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான நடிகர் ஸ்ரீநாத், விஜய்யாக வாழ்வது ரொம்ப கஷ்டம் என்று டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் தேதி இதுவா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலியின் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாக உள்ளது.