close
Choose your channels

ஓய்வுக்கு இதுதான் காரணம்… வைரலாகும் ஸ்ரீசாந்தின் உருக்கமான பதிவு!

Thursday, March 10, 2022 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று குறைந்த நாட்களில் பிரபலமானவர் கேரள வீரர் ஸ்ரீசாந்த். இவர் ஐபிஎல் போட்டிகளின்போது ஸ்பாட் பிக்ஸில் பிரச்சனையில் சிக்கி 7 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியாமல் தவித்துவந்தார். தற்போது டொமஸ்டிக் (முதல்தர கிரிக்கெட்) போட்டிகளில் விளையாடி வந்த நிலையில் தீடிரென ஓய்வை அறிவித்து இருப்பது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 2006 முதல் 2011 வரை மிக தீவிரமாக விளையாடிவந்த ஸ்ரீசாந்த் கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியபோது ஸ்பாட் பிக்ஸில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்தக் குற்றச்சாட்டில் ஈடுபட்ட அங்கீத் சவான், அஜித் சண்டிலா, ஸ்ரீசாந்த் ஆகிய மூவருக்கும் பிசிசிஐ வாழ்நாள் தடையை விதித்தது. ஆனால் ஸ்ரீசாந்த் தன் மீதான குற்றச்சாட்டிற்கு எந்தவித முகாந்திரமும் என டெல்லி நீதிமன்றத்தில் வாதாடியதை அடுத்து அவருடைய தண்டனை 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு தண்டனையில் இருந்து வெளியேறிய ஸ்ரீசாந்த் ராஞ்சி போட்டிகளிலும் விஜய் ஹசாரே போட்டிகளிலும் விளையாடத் துவங்கினார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் இடம்பெறுவதற்காக கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தனது பெயரை ஏலத்திற்கு அனுப்பியிருந்தார். ஆனால் ஸ்ரீசாந்தை ஐபிஎல் அணிகள் கண்டுகொள்ளவே இல்லை. இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்திலும் இவருடைய பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதை அடுத்து டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாகத் தற்போது அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

இந்திய அணிக்காக 27 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, 53 ஒருநாள் போட்டி, 63 டி20 போட்டிகளில் விளையாடிய ஸ்ரீசாந்த் கடந்த ஆண்டு முதல் ராஞ்சிக் கோப்பைக்காக கேரள அணியில் இடம்பெற்று விளையாடினார். தொடர்ந்து இந்த முதல்தர கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மிகுந்த சோகத்துடன் கனத்த இதயத்துடன் இதைச் சொல்கிறேன். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். அடுத்த தலைமுறை வீரர்களுக்காக எனது முதல்தர கிரிக்கெட் வாழ்க்கையை இத்தோடு முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன். இது தனிப்பட்ட முடிவு, இது மகிழ்ச்சியை தராது என்று எனக்குத் தெரிந்தாலும் இந்த நேரத்தில் முடிவெடுப்பது மரியாதைக்குரிய நடவடிக்கையாக நினைக்கிறேன என ஸ்ரீகாந்த் உருக்கமாகக் கருத்துக் கூறியிருப்பது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.