close
Choose your channels

கர்நாடக அரசியல் கட்சியின் மூத்த தலைவர் கொரோனாவுக்கு பலி!!! அதிர்ச்சி தகவல்!!!

Thursday, September 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கர்நாடக அரசியல் கட்சியின் மூத்த தலைவர் கொரோனாவுக்கு பலி!!! அதிர்ச்சி தகவல்!!!

 

கர்நாடக மாநிலத்தின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான அப்பாஜி கவுடா கொரோனாவால் உயிரிழந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு வயது 67 என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் கொரோனா தொற்று கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தின் மூத்த தலைவர் கொரோனாவால் உயிரிழந்து இருப்பதும் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சில தினங்களுக்கு முன் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகச் செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் முதல்வர் எடியூரப்பா உட்பட பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது முதல்வர் எடியூரப்பா நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் சிவமோகா மாவட்டம் பத்ராவதி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான அப்பாஜி கவுடா கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்து உள்ளார். அவர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் தகவல்கள் கூறப்படுகிறது. நேற்று திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.