தெருவில் நடமாட முடியாது.. கே.எஸ். ரவிகுமாருக்கு முன்னாள் அமைச்சர் மிரட்டலா?

  • IndiaGlitz, [Friday,December 08 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் நடித்த ’படையப்பா’ படம் குறித்து கேஎஸ் ரவிக்குமார் கூறிய கருத்தை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் நடித்த ’முத்து’ திரைப்படத்தின் ரீரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த போது ‘ நான் நீலாம்பரி கேரக்டரை எழுதும்போது ஜெயலலிதா மேடத்தை மனதில் வைத்து எழுதினேன். ஒரு கம்பீரமான பெண்ணுக்கு எப்படிப்பட்ட உடல் மொழி வேண்டுமோ அதையெல்லாம் அவங்களை நினைத்து நான் எழுதினேன்’ என்று கே.எஸ் ரவிக்குமார் கூறியிருந்தார்.

கே.எஸ் ரவிக்குமார் பேச்சுக்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இதுகுறித்து கூறியபோது, ‘அம்மாவின் ஆளுமை , ஆற்றல், திறமை என்ன? என்பது கே.எஸ்.ரவிகுமாருக்கு தெரியாதா? உண்மையில் அவருக்கு தில் இருந்திருந்தால் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இதை சொல்லி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இத்தனை ஆண்டுகளுக்கு கழித்து சொல்வது கோழைத்தனம். புரட்சித்தலைவராக இருக்கட்டும் அம்மாவாக இருக்கட்டும் மறைந்த தலைவர்கள் குறித்து பேசுவது நாகரீகமற்றது’ என்று தெரிவித்தார்

மேலும் ’இனிமேல் அம்மா பத்தி பேசினால் நிச்சயம் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அம்மா இருக்கும்போது இதை சொல்லியிருந்தால் அவர் தெருவில் நடமாடி இருக்க முடியுமா’ என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் அந்த நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ்.ரவிகுமாரின் பேச்சில் ஜெயலலிதாவை அவமரியாதை செய்யும் வார்த்தைகள் எதுவும் இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

ஒருத்தனோட வீக்னெஸ் கண்டுபிடித்து குத்து குத்துன்னு குத்தாதீங்க.. அர்ச்சனாவுக்கு குறி வைத்தது யார்?

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடந்து வரும் டாஸ்க்கில் வெற்றி பெற்று 5 ஸ்டார்களை எடுக்க வேண்டும் என தீவிரமாக போட்டியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த டாஸ்க்கில் கலந்து கொண்டவர்களை

இரண்டே மாதத்தில் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்த சீரியல்.. பின்னுக்கு தள்ளப்பட்ட எதிர்நீச்சல்..!

ஜி மாரிமுத்து நடித்துக் கொண்டிருந்தபோது 'எதிர்நீச்சல்' சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இரண்டு இடங்களில் இருந்து கொண்டிருந்த நிலையில் தற்போது கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பித்த

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு,..!

காமெடி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்டு உத்தரவு நீதிமன்றம் பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆணென்ன?பெண்னென்ன? நயன்தாரா போல் நாமும் செயல்படுவோம்: வெள்ள மீட்பு பணி குறித்து பார்த்திபன்

திருமதி நயன்தாரா உட்பட பலரும்  வெள்ளத்தால் சிக்கிய மக்களின் தேவை அறிந்து  செயல்பட்டது போல் நாமும் செயல்படுவோம். இதில் ஆணென்ன?பெண்னென்ன?

விஷ்ணுவை வச்சு செய்யும் விஜய் வர்மா.. 5 ஸ்டாருக்கான ஆவேசமான வாதம்..!

பிக் பாஸ் வீட்டில் தற்போது 5 ஸ்டார்களுக்கான டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் அந்த ஸ்டார்களை கைப்பற்ற போட்டியாளர்கள் குழு தீவிரமாக விளையாடி வருகிறது.  விஷ்ணு, விஜய் வர்மா, அர்ச்சனா, ரவீனா, மணி,