close
Choose your channels

அரசியல் பெருங்கடலில் விஜய் மூழ்குவாரா? கரை சேருவாரா? முன்னாள் அதிமுக அமைச்சர் கருத்து..!

Friday, February 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில நிமிடங்களுக்கு முன் அவர் தனது அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் பெயரை அறிவித்ததோடு அவர் தான் அரசியலுக்கு வந்தது எதனால்? என்பதை விளக்கியதோடு, அரசியல் என்பது ஒரு புனிதமான சேவை என்பதையும் தனது விரிவான அறிக்கையில் விளக்கி இருந்தார்.

இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல தலைவர்கள் கருத்து தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் முதல் நபராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியல் என்பது பெரும் கடல், அதில் நீந்தி கரை சேர்ந்தவர்களும் உண்டு, மூழ்கி போகிறவர்களும் உண்டு, விஜய் கரை சேர போகிறாரா? அல்லது மூழ்க போகிறாரா? என்பதை பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

சிவாஜி கணேசன் முதல் விஜயகாந்த் வரை ஜெயக்குமார் கூறியபடி அரசியலில் மூழ்கித்தான் போய் உள்ளார்கள். அவர்களைப்போல் விஜய்யும் மூழ்குவாரா அல்லது கரை சேர்ந்து எம்ஜிஆர் போல் சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.