கேரள அழகிகள் மரணத்தில் திடீர் திருப்பம்… 6 பேர் கைது, தொடரும் மர்மம்!

  • IndiaGlitz, [Friday,November 19 2021]

கார் விபத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட கேரள அழகிகள் வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சாலை விபத்து எனக் கருதப்பட்ட இந்த வழக்கு தற்போது 17 நாட்களை கடந்த பிறகு பல்வேறு சந்தேகத்தையும் திடீர் திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டு கேரள அழகிப்போட்டியில் பட்டம் வென்ற அன்சி கபீர் (25), ரன்னர் அஞ்சனா ஷாஜன் (26) இருவரும் ஆண் நண்பர் ஒருவருடன் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் தங்களது காரில் பயணம் செய்துள்ளனர். அவர்கள் ஃபோர்டு ஃபிகோ காரில் எர்ணா குளம் மாவட்டத்தை சேர்ந்த கொச்சி நகரில் பயணம் செய்தபோது வைட்டிலா எனும் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் அழகிகள் அன்சி கபீர், அஞ்சனா ஷாஜன் மற்றும் இவர்களுடன் வந்த ஆண் நண்பரும் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் கார் டிரைவர் அப்துல் ரகுமான் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் இது சாலை விபத்து என்றே கருத்தப்பட்டது.

தற்போது இந்த விபத்துக் குறித்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார், அழகிகள் சென்ற காரை ஒரு AUDI கார் துரத்தி வந்ததையும் விபத்து நடந்த இடத்திற்கு அருகே அந்தக் கார் இரண்டு முறை நெருங்கிச் சென்றதையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்த காரில் இருந்து ஒருவர் இறங்கி வருவது போலவும் சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது.

இதனால் அழகிகள் சென்ற காரை AUDI கார் சேஸ் செய்து இருக்கலாம், அதனால் கார் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்பது போன்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் அழகிகள் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சைஜு எனும் நபர் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீனுக்காக விண்ணப்பித்துள்ளார். இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதைத்தவிர அழகிகள் விருந்துக்காக சென்ற ஹோட்டல் நிர்வாகமும் சிசிடிவி காட்சிகள், டிவிடி காட்சிகள் போன்றவற்றை அழித்து இருக்கிறது. இதுவும் போலீஸ் தரப்பில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே “நெம்பர் 18“ எனப்படும் அந்த ஹோட்டலின் உரிமையாளர் ராய் வயலாட் கைது செய்யப்பட்டு உள்ளார். கூடவே சிசிடிவி காட்சிகளை அழிக்க உறுதுணையாக இருந்த அந்த ஹோட்டலின் ஊழியர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதனால் சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட அழகிகள் வழக்கு தற்போது கொலையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தையும் திடீர் திருப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் கேரளாவில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சென்னை உள்பட 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது

ஓபன் சட்டையில் கேஷுவல் மேக்கப்… படு கிளாமர் புகைப்படம் வெளியிட்ட இளம் நடிகை!

நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் “ஏஞ்சல்“ திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டவர்தான் நடிகை பாயல் ராஜ்புத்.

வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைக்கு தாயான பிரபல பாலிவுட் நடிகை!

பாலிவுட் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கொடிக்கட்டி பறந்துவரும் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, ஐபிஎல் பஞ்சாப்

'ஜெய்பீம்' விவகாரம்: சந்தானம் தெரிவித்த அதே கருத்தை கூறிய சீமான்!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் ஒரு பக்கம் மிகப்பெரிய வெற்றிபெற்ற போதிலும் இன்னொரு பக்கம் இந்த படத்திற்கு சில சர்ச்சைகளும் எழுந்தன என்பதும் குறிப்பாக பாமக கட்சியை சேர்ந்தவர்கள்

'சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் அப்டேட்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்' இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது