close
Choose your channels

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் காலமானார்...!

Friday, June 11, 2021 • தமிழ் Comments
DMK
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழனியின், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மூச்சுத்திணறல் பிரச்சனை காரணமாக இன்று உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில், கடந்த ஆட்சியில் திமுக சார்பாக களமிறங்கி, வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றவர் தான் அன்பழகன். இவருக்கு திடீரென உடல்நலக்குறைபாடு ஏற்பட, பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட, ஆக்சிஜன் அளவும் குறைந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை சிகிச்சை பலனில்லாமல் இவர் உயிரிழந்தார். இவரின் இறப்பிற்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அன்பழகன் பழனியில்,எல்ஐசி வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வந்தார். 2006-2011 ஆம் கால கட்டத்தில், திமுக ஆட்சியின் போது பழனியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos