பருப்பு பாக்கெட்டில் கருப்பு எலி: ஆன்லைன் பர்ச்சேஸ் ஆபத்தானதா?

  • IndiaGlitz, [Thursday,August 10 2017]

தற்போது ஆன்லைனில் அனைத்து பொருட்களையும் ஆர்டர் செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. வீட்டில் உட்கார்ந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து விட்டு பேமெண்ட்டையும் செலுத்திவிட்டால் வீடுதேடி பொருள் வந்துவிடும். இந்த எளிய வழிமுறைகளால் சின்ன பொருட்கள் முதல் பெரிய பொருட்கள் வரை ஆன்லைனில் ஆர்டர்கள் குவிகிறது.
இந்த நிலையில் புகழ்பெற்ற ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் ஐதராபாத்தை சேர்ந்த சுமன்னா என்பவர் பருப்பு உள்பட சில பொருட்களை ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆர்டர் செய்துள்ளார். மறுநாள் அவருக்கு பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் பொருட்களை மட்டும் சரிபார்த்துவிட்டு டெலிவரி செய்த நபரை அனுப்பிவிட்டார்
பின்னர் மறுநாள் சாவகாசமாக பொருட்களை சரிபார்த்தபோது பருப்பு பாக்கெட்டில் கருப்பாக ஏதோ ஒரு பொருள் தெரிந்துள்ளது. பின்னர் உற்றுப்பார்க்கையில் அது ஒரு செத்த எலி என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். உடனடியாக தனது செல்போனில் பாக்கெட்டை பிரிக்கும் முன்னரும், பிரித்த பின்னரும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பின்னர் அந்த குறிப்பிட்ட ஆன்லைன் நிறுவனத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். நடந்த தவறுக்கு சிறிதும் வருந்தாமல் வேறு பொருளை மாற்றி தருகிறோம் என்று மட்டும் பதில் வந்துள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த சுமன்னா உடனே ஐதராபாத் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்., இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரி இதுகுறித்து விசாரணை செய்ய சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளார். தரமான பொருள் என்பதால்தான் அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். ஆனால் இதுபோன்று கவனக்குறைவுடன் பேக்கிங் செய்யப்படுவது, அதிலும் உணவுப்பொருளில் கவனக்குறைவாக இருப்பது பொதுமக்களின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். தன்னை போன்று வேறு யாரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே புகார் கொடுத்ததாக சுமன்னா தெரிவித்துள்ளார்,

More News

அஜித்தின் கண்களில் ஒரு சிறுவனின் துள்ளல் தெரிந்தது. ஹாலிவுட் நடிகை ஆச்சரியம்

கோலிவுட்டில் பல திரைப்படங்கள் உலக தரத்தில் தயாரிக்கப்படுவதாக விளம்பரத்தினாலும் உண்மையாகவே உலக தரத்தில் உருவான படம் 'விவேகம்' என்பது அந்த படம் குறித்து வெளிவரும் தகவல்கள் உறுதி செய்கின்றன.

'விஐபி 2' அதிகாலை காட்சி திடீர் ரத்து! காரணம் என்ன?

தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படம் வரும் வெள்ளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது...

ஓவியாவுக்கு பதிலாக புதிய நட்சத்திரம்: களைகட்டுமா பிக்பாஸ்?

கடந்த சில வாரங்களாக தமிழக மக்களை பெரிதும் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் களையிழந்து காணப்படுகிறது...

சிகிச்சை மறுக்கப்பட்ட தமிழர் குடும்பத்தினர்களிடம் மன்னிப்பு கேட்ட கேரள முதல்வர்

தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்ற கூலித்தொழிலாளி கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் பணிபுரிந்து வந்தார்...

அதிமுக அம்மா அணியில் இருந்து சசிகலா-தினகரன் நீக்கம்: முதல்வர் பழனிச்சாமி அதிரடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக பிரிந்த நிலையில் சசிகலா அணி கடந்த சில மாதங்களாக மேலும் பிரிந்து ஈபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி என உடைந்தது.