close
Choose your channels

விஷால் வீடு தாக்குதல், சிவில் இஞ்ஜினியர் உள்பட 4 பேர் கைது: தாக்குதலுக்கு கூறிய அதிர்ச்சி காரணம்!

Friday, September 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடிகர் விஷாலின் வீடு தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விஷால் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்ததில், விஷால் வீட்டில் கல்வீசி தாக்குதல் செய்தது நான்கு பேர் என கண்டுபிடித்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தற்போது அந்த நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் புதுக்கோட்டையை சிவில் இன்ஜினியர் மணிரத்னம் என்பதும் மற்ற மூவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய உள்ளது.

இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து நால்வரிடமும் காவல்துறையினர் விசாரித்தபோது நால்வரும் குடிபோதையில் இருந்ததாகவும் அவர்கள் தங்களுக்குள் சண்டை போட்டு கொள்ளும்போது கல்வீசி தாக்கி நடத்தியதாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக விஷால் வீட்டின் மீது கல் பட்டு கண்ணாடி உடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் மேலும் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.