close
Choose your channels

4 தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Saturday, April 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்களவை தேர்தலுடன் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மீதியுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மே மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது

இந்த நிலையில் இந்த நான்கு தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சூலூர் தொகுதியில் பொங்கலூர் பழனிச்சாமி, அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றம் தொகுதியில் சரவணன் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் சண்முகையா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவை அடுத்து அதிமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக போன்ற கட்சிகளும் விரைவில் வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos