close
Choose your channels

மாமியார்-மருமகள் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனை: 4 உயிர்கள் பலியான பரிதாபம்!

Tuesday, February 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாமியார் மருமகள் இடையே கோலம் போடுவதில் ஏற்பட்ட சிறு சண்டை காரணமாக நான்கு உயிர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் ராணிப்பேட்டை அருகே நடந்துள்ளது

ராணிப்பேட்டையை அடுத்த சோளிங்கர் என்ற பகுதியை சேர்ந்தவ வெங்கடேஷ் என்பவருக்கும் நிர்மலா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்

வெங்கடேஷ் கொடைக்கானலில் வேலை செய்ததால் நிர்மலா தனது மாமனார் மற்றும் மாமியாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நிர்மலாவின் மாமியார் நிர்மலா போட்ட கோலத்தை அழித்து விட்டு தனியாக ஒரு கோலம் போட்டதாக தெரிகிறது. இதனை நிர்மலா தனது மாமியாரிடம் தட்டி கேட்டதால் இருவருக்கும் இடையே கடும் சண்டை மூண்டு ஒருவரை ஒருவர் திட்டி உள்ளனர்

இந்த நிலையில் கோலம் விவகாரத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிர்மலா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து கொடைக்கானலில் இருந்து வந்த வெங்கடேஷ், தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேகமாக காரில் சென்று விட்டார். அவர் மருத்துவமனையில் இருக்கும் நிர்மலாவின் உடலை பார்க்கத்தான் செல்வதாக அனைவரும் கருதினர்

ஆனால் திடீரென ரயில் முன் பாய்ந்து வெங்கடேஷ் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ரயில் தண்டவாளம் அருகே இருந்த மூன்று உடல்களையும் கைப்பற்றிய போலீசார் காரில் செல்லும் போது தற்செயலாக நடந்த விபத்து அல்லது தற்கொலை முயற்சியா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்

வீட்டு வாசலில் கோலம் போடும் ஒரு சிறு பிரச்சனையால் ஒரு குடும்பத்தின் நான்கு உயிர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.