'குட்டி லவ் ஸ்டோரி'யில் இணையும் 4 முன்னணி இயக்குனர்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படாததால் திரை உலகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. இருப்பினும் ஓடிடி பிளாட்பாரம் என ஒன்று இருப்பதால் ஓரளவுக்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் முன்னணி இயக்குனர்களும் ஓடிடி பக்கம் திரும்பி திரைப்படங்களையும், ஆந்தாலஜி படங்களையும் இயக்கி வருகின்றனர் என்பது குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்துள்ளோம். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் நால்வர் இணைந்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கி வருகின்றனர்.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்திற்கு ’குட்டி லவ் ஸ்டோரி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் வெங்கட்பிரபு, இயக்குனர் விஜய் மற்றும் இயக்குனர் நலன் குமாரசாமி ஆகிய நால்வரும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்க உள்ளனர்.

இந்த படம் குறித்த புரமோ வீடியோவை கௌதம் மேனன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். கவிதைத்தனத்துடன் இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும், ’குட்டி லவ் ஸ்டோரி’ திரைப்படம் விரைவில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளிவர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிக்கு தடை: மத்திய அரசு மீண்டும் அதிரடி

இந்தியா மற்றும் சீனா நாடுகளின் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டதில்

மனைவியிடம் போனில் தகவல் தெரிவித்துவிட்டு 8வது மாடியில் இருந்து குதித்த டாக்டர்!

மனைவியிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக போனில் தகவல் தெரிவித்துவிட்டு 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட டாக்டர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்: மேலும் 5 ரசிகர்கள் பலி

பிரபல தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

நல்லவேளை டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டது: அதிர்ச்சி தகவல் 

சீனாவின் செயலியான டிக்டாக் சமீபத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது தெரிந்ததே. இந்த செயலியால் ஏராளமான இளம் பெண்கள் கலாச்சாரத்தை மதிக்காமல் தவறான பாதையில் செல்வதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொரோனாவை கையாள தனி ஆம்புலன்ஸ் சேவையைத் துவக்கி வைத்த முதல்வர்!!! அடுத்த அதிரடி!!!

இந்திய அளவில் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது