close
Choose your channels

அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் நால்வரும் சண்டை போட்டால் எப்படி இருக்கும்?

Monday, July 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர்கள் இரண்டு பேர் ஒரே படத்தில் இணைந்து நடிப்பதே கோலிவுட் திரையுலகில் அபூர்வமாக இருக்கும். அதிலும் அந்த இரண்டு பிரபலங்களுக்கும் சண்டைக்காட்சி இருந்தால் தியேட்டரே பரபரப்பாகிவிடும். 'கூண்டுக்கிளி' படத்தில் எம்ஜிஆர்-சிவாஜி சண்டைக்கட்சி, 'தாயில்லாமல் நானில்லை' படத்தில் கமல்-ரஜினி சண்டைக்காட்சிகளின்போது தியேட்டர் என்ன பாடுபட்டது என்பது அந்தக்கால ரசிகர்களுக்கு தெரியும்

இந்த நிலையில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகிய நால்வரும் சண்டை போடும் காட்சி இருப்பதாக செய்தி கசிந்துள்ளது. நால்வருக்குள் சண்டையா? அல்லது நால்வரும் இணைந்து பொதுவான எதிரிகளுடன் சண்டை போடுகிறார்களா? என்பது தெரியவில்லை.

இருப்பினும் நால்வரும் ஆக்சன் காட்சிகளில் பின்னி பிடலெடுப்பவர்கள் என்பதால் இந்த செய்தி உண்மையாக இருந்தால் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஆக்சன் விருந்து காத்திருக்கின்றது என்பது மட்டும் நிச்சயம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.