close
Choose your channels

நயன்தாராவுக்காக பணம் வாங்காமல் பணி செய்த நான்கு பிரபலங்கள்

Tuesday, July 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே. இந்த ஆண்டின் மிக எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த படத்தில் பணிபுரிந்த நான்கு பிரபலங்கள் சம்பளம் வாங்காமல் பணி செய்துள்ளதாக இயக்குனர் நெல்சன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

'கோலமாவு கோகிலா' படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் 'எனக்கு கல்யாண ஆசை வந்துருச்சிடி' என்ற பாடலை எழுதியுள்ளார் என்பதும் இந்த பாடல் யூடியூபில் மூன்றரை கோடி பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. அதேபோல் இந்த படத்தில் இயக்குனரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் மூன்று பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் மற்றும் பாடலாசிரியர் அருண்காமராஜ் தலா ஒரு பாடலையும் எழுதியுள்ளனர். நால்வருமே தாங்கள் பாடல் எழுதியதற்காக சம்பளமே வாங்கவில்லை என இயக்குனர் நெல்சன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஜூலை 19ஆம் தேதி 'கோலமாவு கோகிலா' படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.