close
Choose your channels

சிம்புவின் 'மாநாடு' படத்தில் இன்று இணைந்த நான்கு பிரபலங்கள்

Wednesday, February 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது என்பதும் இந்த பூஜையில் சீமான், பாரதிராஜா உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பதும் இதனை அடுத்து படப்பிடிப்பும் இன்று முதல் தொடங்கியது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர், எஸ்ஜே சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி அமரன், உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் என்பது தெரிந்ததே. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் இன்று மேலும் நான்கு பிரபலங்கள் இன்று இணைந்துள்ளனர்

இந்த படத்தின் இன்று நடிகர் உதயா, நடிகர் பஞ்சு சுப்பு, மற்றும் நடிகர் அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் இணைந்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த படத்தின் கலை இயக்குனராக உமேஷ் குமார் என்பவர் இணைந்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை சற்றுமுன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.