close
Choose your channels

மீண்டும் அதிமுக ஆட்சி: 4 நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள்

Friday, March 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டாலும் உண்மையான போட்டி அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்கு இடையே நடைபெற்று வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் ஏற்கனவே இந்த தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்பது குறித்து கருத்துக் கணிப்புகள் வெளி வந்துள்ளன என்பதும் அதில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என ஒரு சில கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நான்கு நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் வெளிவந்துள்ள நிலையில் அந்த நான்கிலும் அதிமுகவே வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. ராஜ் டிவி, குமுதம், ஆதன் செய்திகள் மற்றும் நெட்வொர்க் டெமாக்ரசி ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. 

அதன் முழு விவரம் இதோ:

குமுதம் முடிவுகள் : 

அதிமுக - 125 இடங்கள், 
திமுக - 109 இடங்கள் 

ஆதன் தமிழ் : 

அதிமுக - 130,
 திமுக - 100 

நெட்வொர்க் டெமாக்ரசி : 

அதிமுக - 122, 
திமுக - 111

ராஜ் டிவி : 

அதிமுக - 124, 
திமுக - 94 
மற்றவை ‌- 16

அதிமுக, திமுக ஆகிய இருதரப்புக்கும் சாதகமாக மாறிமாறி கருத்துக்கணிப்புகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் மக்களின் மனநிலை என்ன? என்பது மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தான் தெரிய வரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.