கூட்டமாக தொழுகை நடத்த அனுமதிக்காததால் ஆத்திரம்: போலீசாரை தாக்கிய 40 பேர் மீது வழக்கு

கர்நாடகாவின் மங்களூரு மற்றும் ஹூப்ளி பகுதிகளில் கூட்டம் கூடி தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த கூட்டத்தினர் கடுமையாக தாக்கியதில் 4 போலீசார் படுகாயம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுமென மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் அனைத்து மத வழிபாட்டு கூடங்களும் மூடப்பட்டுள்ளது.

இருப்பினும் கர்நாடகாவின் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் கூட்டம் கூடி தொழுகை நடத்த சிலர் முயன்றதாக தெரிகிறது. ஆனால் இதற்கு போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கூட்டத்தினர் போலீசார்களை கடுமையாக தாக்கியதாகவும் இதில் 4 போலீசார் படுகாயம் அடைந்ததாகவும் தெரிகிறது.

இதனையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார், போலீசார்களை தாக்கியதாக 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் தப்பிவிட்டதால் பரபரப்பு

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்றுவரை 309 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த

கொரோனா தடுப்பு நடவடிக்கை!!! தமிழ்நாட்டிலும் பயன்பாட்டுக்கு வந்த ரோபோக்கள்!!!

கோரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தன்மைக் கொண்டது. எனவே கொரோனா நோய்த்தொற்றை பரிசோதனை செய்வதற்கும்,

கொரோனாவால் கங்கை ஆரோக்கியமாக இருக்கிறது!!! மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பல தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன

தமிழகத்தில் இன்று மட்டும் 102 பேர் கொரோனாவால் பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 411

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒற்றை இலக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

கொரோனாவால் அமெரிக்காவில் 6.65 மில்லியன் மக்கள் வேலையிழப்பு!!! அரசின் நிவாரணத்தொகைக்கு விண்ணப்பம்!!!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நாடுகளின் பட்டியலில் தற்போது அமெரிக்கா முதல் இடத்தை பிடித்து இருக்கிறது