ரஷ்ய நதியில் மூழ்கி 4 தமிழக மாணவர்கள் பலி: ஒருவர் சென்னை மாணவர் என தகவல்

  • IndiaGlitz, [Sunday,August 09 2020]

தமிழகம் உள்பட இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்க செல்கின்றனர். இந்தியாவில் படிப்பதை விட ரஷ்யாவில் மருத்துவம் படிப்பது எளிது மற்றும் செலவும் குறைவு என்பதால் பல மாணவர்கள் ரஷ்யாவில் படித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் இருந்து ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற நான்கு மாணவர்கள் அங்குள்ள ஒரு நதியில் மூழ்கி உயிரிழந்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள ஓல்கா என்ற நதியில் தமிழக மாணவர்கள் நால்வர் சமீபத்தில் குளிக்கச் சென்றனர். அப்போது நால்வரும் நதி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் சென்னையை சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ், மனோஜ் ஆனந்த் ஆகியோர் என்பது உறுதியாகியுள்ளது.

ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழ் மாணவர்கள் நால்வர் நதியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.