close
Choose your channels

ஒரே ஒரு தமிழ் படத்தில் நடிக்க நடிகைக்கு நயன்தாராவை விட 4 மடங்கு சம்பளமா?

Saturday, July 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘தி லெஜண்ட்’திரைப்படத்தில் நடித்த நடிகைக்கு நயன்தாராவை விட நான்கு மடங்கு சம்பளம் வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் தொழிலதிபர் அருள் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்தநிலையில் இந்த படத்தில் அருள் சரவணன் மனைவியாக கீர்த்திகா திவாரி என்பவர் நடித்திருந்த நிலையில் அவரது காதலியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா என்பவர் நடித்திருந்தார்.

ஊர்வசி ரெளட்டாலா பாலிவுட்டில் பிரபலம் என்பதால் இவருக்கு மிகப் பெரிய சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ் திரை உலகில் மிக அதிகமாக ஒரு திரைப்படத்திற்கு 5 கோடி சம்பளம் நயன்தாரா வாங்குவதாக கூறப்படும் நிலையில் அவரை விட நான்கு மடங்கு அதாவது ரூ 20 கோடி சம்பளம் ‘தி லெஜண்ட்’ படத்திற்காக ஊர்வசி ரெளட்டாலாவுக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வளவுக்கும் தமிழில் இவர் நடித்த முதல் படம் ’தி லெஜண்ட்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.