close
Choose your channels

இந்தியாவில் கொரோனா: பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்ததால் பரபரப்பு

Thursday, March 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் மனித இனத்தையே அழித்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் தாக்கி, ஏற்கனவே மூன்று உயிர்களை பலி வாங்கிய நிலையில், தற்போது நான்காவதாக ஒருவர் உயிரிழந்ததாக வெளிவந்துள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே டெல்லி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒருவரும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், இதனையடுத்து இந்தியாவில் கொரோனா தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாபை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர் சற்று முன்னர் மரணம் அடைந்துவிட்டதாகவும் பஞ்சாப் மாநிலம் உறுதி செய்துள்ளது. இதனை அடுத்து பஞ்சாபில் பொது போக்குவரத்தை நிறுத்தவும் 20 பேருக்கு மேல் கூடவும் தடை விதித்து பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.