ஈபிள் டவர் மேல் கயிற்றில் நடந்த இளைஞர்… தெறிக்கவிடும் வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Tuesday,September 21 2021]


உலகத்திலேயே உயரமான அடையாளச் சின்னமான ஈபிள் டவரில் 230 அடி உயரத்தில் கயிற்றைக் கட்டி அதன் மேல் இளைஞர் ஒருவர் நடந்துவந்த வீடியோ கடந்த சில தினங்களகாக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஈபிள் டவரில் கயிற்றை கட்டிய அந்த இளைஞர் மறுமுனையில் உள்ள சாய்லேட் தியேட்டரில் அதை இணைத்த நிலையில் பத்திரமாகத் தரையிரங்கிய காட்சிகளையும் பார்க்க முடிகிறது.

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நாதன் பவுலின் எனும் 27 வயது இளைஞர் கடந்த சனிக்கிழமை ஈபிள் டவரில் 230 அடி உயரத்தில் கயிற்றைக் கட்டி மறுமுனையில் உள்ள சாய்லேட் தியேட்டரில் அதை இணைத்து இருக்கிறார். இந்நிலையில் 230 அடி உயரத்தில் கட்டப்பட்ட அந்தக் கயிற்றில் நாதன் அசலாட்டாக வெறும் காலுடன் நடந்து வந்துள்ளார். மேலும் அவர் 2,200 அடி வரையிலும் நடந்து வந்து தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.

நாதன் பவுலின் செய்த இந்த சாகசக் காட்சிகளை ஈபிள் டவருக்கு கீழ் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்தோடு கண்டுகளித்தனர். மேலும் ஐரோப்பிய கலாச்சார திருவிழாவை ஒட்டி நாதன் பவுலின் இந்த சாகசத்தைச் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஐரோப்பாவில் கொண்டாடப்படும் பாலின் கலாச்சார திருவிழாவிற்கு முன்பு ஒலிம்யாட் எனும் விழாவும் கொண்டாடப்படுவது வழக்கமாம்.

இந்த திருவிழாவையொட்டி நாதன் பவுலின் ஈபிள் டவரில் ஏறி கயிற்றில் நடந்து இருக்கிறார். இதற்கு முன்பு லாடி- டிபென்ஸ்ஸில் உள்ள இரு வணிக கட்டிடத்திற்கு இடையே கயிற்றைக் கட்டி 490 அடி உயரத்தில் கிட்டத்தட்ட 1,700 அடி தூரம் நடந்திருக்கிறார். நாதன் பவுலின் செய்த இந்த சாகசத்தைப் பார்த்து பலரும் உற்சாகம் அடைந்ததோடு அவரை பாராட்டவும் செய்துள்ளனர்.

More News

ஒருநாளில் 30 நிமிடம் உறக்கம்… ஆனாலும் உற்சாகமாக இருக்கும் விசித்திர இளைஞர்!

ஜப்பானில் நாட்டில் உள்ள இளைஞர் ஒருவர் தினமும் 30 நிமிடமே உறங்குகிறாராம். ஆனாலும்

இன்று வெளியான 'வலிமை' போஸ்டரில் இதை கவனித்தீர்களா?

'வலிமை' திரைப்படத்தின் வில்லன் நடிகர் கார்த்திக்கேயாவின் பிறந்தநாளை அடுத்து இன்று புதிய போஸ்டர் ஒன்று வெளியானது என்பதும், இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரல்

ஹாலிவுட் நடிகைகளையே தூக்கிச் சாப்பிட்ட நடிகை ராய் லட்சுமி… வைரல் புகைப்படம்!

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி.

பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய 'சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தை இயக்கி வருகிறார்

சூர்யாவின் அடுத்த படத்திற்கு செட் ரெடி: படப்பிடிப்பு எப்போது?

நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவரது அடுத்த படத்திற்கான செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும்,