close
Choose your channels

தமிழகத்திலும் வெள்ளி முதல் திங்கள் வரை முழு ஊரடங்கா?

Saturday, April 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையிலும் வேறு சில மாநிலங்களிலும் வெள்ளி இரவு முதல் திங்கள் அதிகாலை வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது ஞாயிறு மட்டுமே முழு ஊரடங்கும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் வெள்ளி மாலை முதல் திங்கள் காலை வரை முழு ஊரடங்கு நீட்டிக்க பரிசீலனை நடந்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

சற்றுமுன் தமிழகத்தில் மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்புகள் இன்று மாலை வெளிவரும் என்றும் செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த வார இறுதி நாட்களின் ஊரடங்கு குறித்த தகவல் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி தமிழகத்தில் செயல்படும் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் கிட்டத்தட்ட கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு போல் மீண்டும் பிறப்பிக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. எனவே பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.