close
Choose your channels

தமிழகத்தின் முக்கிய நகரில் நாளை முதல் முழு ஊரடங்கு: கலெக்டர் அதிரடி அறிவிப்பு 

Friday, July 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது என்பதும் இன்று மட்டும் தமிழகத்தில் 6785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இதனால் தமிழகத்தின் மொத்த பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் 31-ம் தேதியுடன் ஆறாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் அதற்கு மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற அச்சம் தற்போது பொதுமக்களிடையே எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் விரைவில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுவதால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாகிய கோவையில் நாளை மாலை 5 மணி முதல் ஜூலை 27-ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு என அம்மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு காரணமாக கோவை மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.