close
Choose your channels

டீக்கடையில் வாங்கிய வடையில் முழு பிளேடு: அதிர்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர்!

Friday, November 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நிலக்கோட்டை அருகே டீக்கடை ஒன்றில் வாங்கிய வடையில் முழு பிளேடு இருந்ததை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அதிர்ச்சி அடைந்த சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கனகராஜ். இவர் இன்று காலை பேருந்து நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் டீ சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு தேவையான வடைகளை வாங்கிச் சென்றார்

அவர் வீட்டுக்கு சென்று அந்த வடைகளை குடும்பத்தினரிடம் கொடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு வடையில் முழு பிளேடு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவர் டீ கடைகாரரிடம் இதுகுறித்து புகார் கூறியதோடு உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்

உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் டீ கடைக்கு வந்து அந்த கடையில் வடை சுட பயன்படுத்தப்பட்ட மாவு மற்றும் பருப்புகளை பறிமுதல் செய்து ஆய்வுக்கு எடுத்து சென்றனர் மேலும் டீ கடை உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

பொதுமக்கள் சாப்பிடும் வடையில் ஒரு முழு பிளேடு இருந்த தகவல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.