டெல்லியில் முழு ஊரடங்கு....! முதல்வர் அறிவிப்பு...!

  • IndiaGlitz, [Thursday,April 15 2021]

வாரத்தின் இறுதி நாட்களில் டெல்லியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய முதல்வர் கூறியிருப்பதாவது,

கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், அதை கட்டுப்படுத்தும் விதத்தில் டெல்லியில் வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். வார இறுதி நாட்களில் மட்டும் செயல்பட்டு வந்த மார்க்கெட்டுகள், இனி குறிப்பிட்ட சில வார நாட்களில் செயல்பட உள்ளது. ஹோட்டல்கள்,திரையரங்குகள், மால்கள் வாரத்தின் இறுதியில் செயல்படாது. உணவகங்களில் பார்சல் தர அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.