மணமேடையில் வேடிக்கை காட்டிய ஜோடிகள்… படு சுவாரசியம் கொண்ட வீடியோ காட்சிகள்!

  • IndiaGlitz, [Monday,July 26 2021]

இந்தியத் திருமணங்களில் ஏகப்பட்ட சடங்குகள் இருப்பது நமக்கு பல நேரங்களில் சலிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் திருமணத்திற்கு இடையில் நடைபெறும் சில வேடிக்கையான சம்பங்களும், மணமக்களை மகிழ்விப்பதற்காகக் குடும்பத்தினர் செய்யும் சில செயல்களும் ஒரு அலாதியான சந்தோஷத்தை கொடுக்கும். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற திருமணங்களில் இருந்து சில வேடிக்கை காட்சிகள்-

1.மணிஷ் மிஸ்ரா என்பவர் பதிவிட்டு உள்ள டிவிட்டர் வீடியோ ஒன்றில் மணப்பெண் ஒருவர் மேடையிலேயே கபடி ஆடுகிறார். அதாவது மேடையில் இருந்த மணமகள் முதலில் சிறிது வெட்கப்பட்டுக் கொண்டே மணமகனுக்கு மாலை அணிவித்து விட்டார். பின்னர் மணமகன் மாலை அணிவிக்க வரும்போது அதை ஏற்றுக்கொள்ளாமல் தனது லெகங்காவை சரி செய்தவாறே, மேடை முழுவதும் அங்கும் இங்கும் ஓடுகிறார். இதனால் மணப்பெண் பார்ப்பதற்கு கபடி ஆடுவது போலே இருக்கும் இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

2.கொரோனா நேரத்தில் வொர்க் ஃப்ரம் கொடுமைக்கு எல்லையே இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் திருமணத்திற்காக மேடையில் அமர்ந்து இருக்கும்போதுகூட மணமகன் ஒருவர் தன்னுடைய லேப்டாப்பை வைத்து வேலைப் பார்த்து இருக்கிறார். இந்த வீடியோ காட்சி சமீபத்தில் மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்டு சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

மேலும் இந்த வீடியோ குறித்து கமெண்ட் பதிவிட்ட சில நெட்டிசன்கள், உங்கள் “கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா” எனக் கிண்டல் செய்துள்ளனர்.

3.நண்பர்களின் லூட்டியால் கடுப்பான மணமகள் வீடியோ ஒன்றும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கேரளாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகனின் நண்பர்கள் சிலர் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது மட்டுமல்லாமல் கிஃப்ட் ஒன்றை கொடுத்து உடனே பிரிக்குமாறு கூறியுள்ளனர். இதனால் ஆர்வத்தோடு கிஃப்ட்டை பிரிந்த அந்த மணமகளின் முகம் கணநேரத்தில் சிவந்து விடுகிறது. கூடவே அந்த கிஃப்டை அவர் தூக்கி வீசி விடுகிறார்.

மணப்பெண் பிரித்த கிஃப்ட்டில் குழந்தைக்கும் பாலூட்டும் பீடிங் பாட்டில் வைக்கப்பட்டதால் மேடையிலேயே இந்த விபரீதம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

4.இன்ஸ்டாவில் பதிவிடப்பட்டு உள்ள மற்றொரு வீடியோவில் மாப்பிள்ளை மணமேடையிலேயே தனது மனைவியை அவமதிக்கும் கொடுமையும் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த மாப்பிள்ளையை கடுமையாக விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

5.இதைத்தவிர மணமேடையிலேயே தூங்கி வழியும் மாப்பிள்ளை ஒருவரின் வீடியோவும் சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ஒரு மனிதனுக்கு திருமணம் என்பது முக்கியமான விஷயம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த நபர் திருமணத்திலேயே தூங்கி வழியும் காட்சி பலரையும் சிரிப்பில் ஆழ்த்தி இருக்கிறது.