இனிமே தா ஆட்டமே இருக்கு… WHO வின் புது எச்சரிக்கை!!!

  • IndiaGlitz, [Wednesday,July 01 2020]

 

கொரோனா வைரஸ் ஏற்டுத்திய தாக்கத்தால் உலகமே அரண்டு போயிருக்கிறது. இந்நிலையில் மிக மோசமான தாக்கம் இனிமேல்தான் நடக்கப் போகிறது என உலகச் சுகாதார நிறுவனம் மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது. கடந்த டிசம்பர் இறுதியில் கண்டுபிடிக்கப் பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் 6 மாதங்களில் உலகையே அதள பாதாளத்திற்கு தள்ளியிருக்கிறது. 1 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இந்நோய் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். உயிரிழப்புகள் 5 லட்சத்தைத் தாண்டியிருச்கிறது.

இந்நிலையில் WHO வின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் “நோய் தடுப்பு நடவடிக்கைகளில் உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை” என கவலைத் தெரிவித்து உள்ளார். “தற்போது இருப்பதைக் காட்டிலும் மிக மோசமான பாதிப்பை உலக நாடுகள் இனிமேல் தான் சந்திக்கப் போகிறது” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக நாடுகள் கொரோனா வைரஸை எதிர்த்து புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது கொரோனா வைரஸ் பரவியது குறித்த ஆய்வுகள் முடிக்கிவிடப் பட்டுள்ளது எனவும் நோய்த்தாக்கத்தின் ஆரம்பத்தை குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறியிருக்கிறார். நோய்த்தாக்கம் எங்கிருந்து தொடங்கியது என்பதை கண்டுபிடிப்பதன் மூலம் கொரோனா நோய்த்தொற்றுக்கு முடிவு கட்ட முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். இதற்காக சீனாவிற்கு ஆய்வாளர்கள் அனுப்பப் பட்டுள்ளனர் என்ற தகவலையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

More News

இந்த விளம்பரத்தை எல்லாம் இந்திய மக்கள் எப்படி ஏத்துக்கிறாங்க??? கடுப்பான டேரன் சமி!!!

அமெரிக்காவில் கடந்த மே 25 ஆம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற இளைஞர் நிறவெறி காரணமாக உயிரிழந்தார்.

சாத்தான்குளம் சம்பவம் அரசாங்கத்தின் தவறல்ல: பாரதிராஜா அறிக்கை

சாத்தான்குளம் தந்தை-மகன் காவல்துறையினரால் அடித்தே கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ரஜினி, கமல் உள்பட ஒட்டுமொத்த திரையுலகமும் குரல் கொடுத்துள்ள நிலையில்

மாஸ்க் அணிவதும் அணியாமல் இருப்பதும் அவருடைய விருப்பம்… கெத்துக் காட்டும் வெள்ளை மாளிகை!!!

கொரோனா நோய்த்தொற்று உலக மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி, முறையான சிகிச்சை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை.

கொந்தளித்த ரஜினிகாந்த்: கோபத்துடன் புகைப்படம் வெளியீடு

சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு அங்கு அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு காரணமாக தமிழகமே கொந்தளித்துப் போயுள்ளது

ஜெயராஜ் கடைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தும் சிபிசிஐடி டி.எஸ்.பி: தாமாக முன்வந்து தகவல்களை தரும் வியாபாரிகள்

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில்