கணேஷை கார்னர் செய்யும் பிக்பாஸ் பங்கேற்பாளர்கள்

  • IndiaGlitz, [Tuesday,August 08 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஃபார்முலாவை கடை பிடித்து வருகின்றனர். யாராவது ஒருத்தரை குறி வைத்து அவருக்கு அதிகபட்ச டார்ச்சர் கொடுத்து அவராகவே வெளியேறும் வகையில் செய்வது.

இதற்கு முதல் பலி பரணி, இரண்டாவது பலி ஓவியா. இந்த நிலையில் பிக்பாஸ் பங்கேற்பாளர்களின் அடுத்த குறியாக கணேஷ் சிக்கியுள்ளார். கணேஷ் மற்றவர்களை விட அதிகம் சாப்பிடுவதை இதுவரை குறைந்தபட்சம் நூறு தடவை சொல்லி காண்பித்திருப்பார்கள். குறிப்பாக வையாபுரிக்கு கணேஷ் மீதுதான் ஒரு கண்ணாக உள்ளது.

இந்த நிலையில் இன்றைய புரமோவில் கணேஷ் சாப்பிடுவதை குறித்து தான் அனைவரும் பேசி கொள்கின்றனர். கணேஷ் சாப்பிடுவதை கேலி செய்யும் சினேகன் 'இவர் பரணியின் இன்னொரு வெர்ஷன் என்றும், இவரை கையை காலை கட்டி அனைவரும் சேர்ந்து வீட்டுக்கு வெளியே தூக்கி போட வேண்டும் என்றும் சொல்கிறார். எனவே இந்த வாரம் கணேஷ் குறைந்த ஓட்டு வாங்கி வெளியே சென்றால் தப்பித்தார். இல்லையெனில் அடுத்த வாரம் முதல் அதிக டார்ச்சரை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கும்.

More News

அடுக்குமாடி குடியிருப்பில் மாதக்கணக்கில் பிணமாக இருந்த பெண்: அதிர்ச்சியில் மகன்

பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்பவர்கள் பக்கத்து வீட்டில் யார் இருக்கின்றார்கள், அவர்கள் பெயர் என்னவென்று கூட தெரியாமல் வருடக்கணக்கில் வாழும் கலாச்சாரம் பெருகி வருகிறது. பக்கத்து வீட்டில் தனியாக இருக்கும் ஒருவர் மரணம் அடைந்தால் கூட, பல நாட்கள் கழித்து துர்நாற்றம் வைத்தே கண்டுபிடிக்கும் நிலை உள்ளது.

இந்தியில் ரீமேக் ஆகும் சூர்யாவின் சூப்பர் ஹிட் படம்

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கிய 'சிங்கம்' படத்தின் மூன்றாம் பாகமான' சி 3' திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்து நல்ல வசூலை குவித்த நிலையில் தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது...

ஓவியா இல்லாத பிக்பாஸை ஓரங்கட்டிய பார்வையாளர்கள்

கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் ஹாட் டாக் ஆக பேசப்பட்டு கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் சிலை இல்லாத மண்டபம் போன்று வெறுமையாக காணப்படுகிறது.

ரஜினியுடன் படித்தாரா சுஹாசினி? புகைப்படம் ஏற்படுத்திய பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகையும் இயக்குனருமான சுஹாசினி 'தாய் வீடு', 'தர்மத்தின் தலைவன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே...

இளம்பெண்கள் சேலை அணிய ஜோதிகா வேண்டுகோள்

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைவரும் கைத்தறி உடைகளை அணிய வேண்டும் என்றும் குறிப்பாக கைத்தறி சேலைகளை இளம்பெண்கள் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு கடந்த சில மாதங்களாகவே ஏற்படுத்தப்பட்டு வருகிறது...