close
Choose your channels

மிளகாய்ப்பொடி தூவி 100 சவரன் நகை கொள்ளை… அதிர்ச்சி சம்பவம்!

Saturday, April 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரள மாநிலம் திருவனந்தப்புரத்தில் தங்க நகை தயாரித்து விற்பனை செய்து வரும் வியாபாரி ஒருவரின் காரை வழிமறித்து மர்ம நபர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் கொள்ளையை தடுக்க முயன்ற உரிமையாளரையும் அரிவாளால் வெட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தின் ஆற்றிங்கல் பகுதியில் தங்கத்தை ஆபரண நகைகளாகத் தயாரித்து அதைக் கடைகளுக்கு விநியோகம் செய்யும் தொழிலை சம்பத் என்பவர் செய்து வருகிறார். இவர் தினத்தோறும் தன்னுடைய அலுவலகத்திற்கு காரில் சென்றுவிட்டு வீடு திரும்புவதாகக் கூறப்படுகிறது. நேற்று இதேபோல தங்கநகைகளை காரில் எடுத்துக் கொண்டு டிரைவர் மற்றும் உறவினர் லக்ஷமண் என்பவரும் வீடு திரும்பியுள்ளார்.

இப்படி வீடு திரும்பிய சம்பத்தை மற்றொரு காரில் வந்த சிலர் வழிமறித்து உள்ளனர். மேலும் இவர்கள் மீது மிளகாய்ப் பொடி தூவியும், கத்தியைக் காட்டி மிரட்டியும் தங்கத்தை கேட்டுள்ளனர். ஆனால் தரமறுத்த சம்பத்தை அந்த மர்மநபர்கள் தாக்கிவிட்டு அவரிடம் இருந்த 100 சவரன் தங்க நகையையும் கொள்ளை அடித்து உள்ளனர். மேலும் உறவினர் லக்ஷமண் மற்றும் டிரைவர் அருண் என்பவரையும் கடத்திச் சென்றுள்ளனர். இப்படி கடத்திச் சென்ற டிரைவரை ஒரு இடத்திலும் உறவினர் லக்ஷமணை ஒரு இடத்திலும் மர்மநபர்கள் இறக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் மிளகாய்ப்பொடி தூவி 100 சவரன் தங்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.