close
Choose your channels

'வலிமை' டிக்கெட் வாங்கிய வெங்கட்பிரபுவிடம் கங்கை அமரன் வைத்த கோரிக்கை!

Tuesday, February 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டை வாங்கி விட்டேன் என்று சமூக வலைத்தளத்தில் கூறிய இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு அவரது தந்தையும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். 

அஜித்தின் 50வது படமான ’மங்காத்தா’ என்ற வெற்றி படத்தை இயக்கிய வெங்கட்பிரபு இயக்கிய ’மாநாடு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதனை அடுத்து தற்போது ’மன்மதலீலை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ள அவர் அந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக உள்ளார். 

இந்த நிலையில் நாளை மறுநாள் ரிலீசாக இருக்கும் ’வலிமை’ திரைப்படத்திற்கான முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் வாங்கி விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெங்கட்பிரபு பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவரது தந்தையான கங்கை அமரன், பிரேம்ஜியையும் கூட்டிட்டு போப்பா’ என டுவிட் செய்துள்ளார். இவர்களுடைய இந்த உரையாடலை ரசித்த ரசிகர்கள் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அஜீத் நடிப்பில் ’மங்காத்தா 2’ படத்தை விரைவில் இயக்க வெங்கட் பிரபுவுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.