close
Choose your channels

நம்ம ஊரு ஸ்டைலில் ஒரு 'Money Heist'.. 'கேங்கர்ஸ்' படம் குறித்து சுந்தர் சி..!

Thursday, April 17, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்ற நிலையில், இந்த படம் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் சுந்தர் சி பேசியபோது, "இந்த படம் நம்ம ஊரு ‘Money Heist' ஸ்டைலில் இருக்கும்," என்று கூறினார்.

‘கேங்கர்ஸ்’ என்ற வார்த்தை ஒன்று இல்லை என்று எல்லோருமே நினைத்திருப்பீர்கள். ட்ரெய்லரிலும் இப்படி ஒரு காட்சி வரும். இந்த டைட்டிலை கொடுத்தவரே வடிவேல் அண்ணன் தான். அவர் கொடுத்த ஐடியாவில் தான் இந்த டைட்டிலே உருவாக்கப்பட்டது என்று சுந்தர் சி கூறினார்..

இந்த படம் குறித்து டிஸ்கஷன் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கேங்ஸ்டர் படம் ஆனால், அதற்கு சரியான டைட்டில் அமையவில்லை என்று நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, வடிவேல் அசால்டாக வந்து ‘கேங்கர்ஸ்’ என்று டைட்டில் வையுங்கள் என்று கூறினார்.

‘கேங்கர்ஸ்’ என்று ஒரு வார்த்தையே இல்லை என்று கூறிய போது, எனக்கு ஒன்றும் தெரியாது. நான் சாதாரணமாக சொன்னேன் என்று வடிவேலு கூறினார். அதன் பிறகு நான் யோசித்துப் பார்த்தபோது, ‘கேங்கர்ஸ்’ என்ற டைட்டிலையே வைக்கலாம். அகராதியிலேயே உள்ள ஒரு வார்த்தையை நாம் எடுத்து வைப்போம் என்றுதான் இந்த டைட்டிலை முடிவு செய்தேன் என்று சுந்தர் சி கூறினார்.

மேலும், இந்த படத்தின் கதை என்பது இதுவரை தமிழில் யாரும் தொடாத சப்ஜெக்ட். அதாவது, நம்ம ஊரு செயலில் ஒரு‘Money Heist' எடுத்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இந்த படம் உருவாகியுள்ளது. ஒரு பெரிய சிட்டியில் நடப்பது போல், ஒரு பெரிய கேங்ஸ்டர் அறிவுபூர்வமாக கொள்ளையடிப்பது போல் இல்லாமல், ஒரு சின்ன ஊரில் ஒரு சராசரியான மனிதர்கள் அதாவது ஒரு வாத்தியார், ஒரு ஆட்டோ ஓட்டுனர், ஒரு அடியாள் ஆகியோர்கள் சேர்ந்து கொள்ளை அடித்தால் எப்படி இருக்கும் என்பதை காமெடி உடன் இந்த படத்தில் கூறியுள்ளோம் என்று தெரிவித்தார் சுந்தர் சி. இந்த தகவலை அடுத்து, இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சி, வடிவேலு, கேத்தரின், தெரசா, வாணி போஜன், பகவதி பெருமாள், தீபா, இளவரசு, சிங்கம் புலி, ஜான்விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு, சத்யா இசையமைத்துள்ளார். குஷ்பு மற்றும் ஏ சி சண்முகம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு, கிருஷ்ணசாமி ஒளிப்பதிவும், பிரவீன் அந்தோணி படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment