close
Choose your channels

பிரபல ரவுடி விகாஷ் துபே என்கவுண்டரில் சுட்டு கொலையா? பெரும் பரபரப்பு

Friday, July 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உத்தரப்பிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை என தகவல் வெளிவந்துள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று மத்திய பிரதேச மாநிலத்த்தில் கைதான விகாஸ்துபேவை உத்தரபிரதேச மாநிலத்திற்கு அழைத்து வந்தபோது மழையால் பாதுகாப்பு பணிக்கு வந்த கார் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த பரபரப்பை பயன்படுத்தி விகாஸ் துபே தப்பிச்செல்ல முயன்றதாகவும் அப்போது போலீசார் சுட்டதில் படுகாயம் அடைந்த விகாஸ் துபே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை எனினும் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே நேற்று விகாஸ் துபேயின் 2 கூட்டாளிகள் போலீசாருடன் நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதும் ஒருவன் மட்டும் கைது செய்யப்பட்டு கான்பூர் அழைத்து வரும் வழியில் போலீசாரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றதால் அவனும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.