close
Choose your channels

வீரமரணம் அடைந்த போலீஸ் அதிகாரியின் மகளுக்கு உதவும் கிரிக்கெட் வீரர்

Tuesday, September 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் போலிசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் அப்துல் ரஷீத் என்பவர் வீரமரணம் அடைந்தார்.
 
அவருடைய உடல் தகனத்தின் போது தந்தையின் மரணத்தை புரிந்து கொள்ள முடியாமல் இருந்த அவருடைய மகள் ஜோரா அழுத காட்சி அனைவரின் நெஞ்சத்தையும் உலுக்கியது. அந்த சிறுமிக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் காவல்துறை உயரதிகாரிகளே கண்கலங்கினர்.
 
இந்த நிலையில் ஜோராவின் கல்வி செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும், அவர் என்னவாக விரும்பினாலும் அந்த கனவு நிறைவேற தான் உதவுவதாகவும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அறிவித்துள்ளார்.  இதனால் கவுதம் காம்பீருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.